தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 5,800-ஐத் தாண்டியுள்ளது என்றும், எட்டு மாவட்டங்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்பு உள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பொது சுகாதாரத் துறை தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 54,122. மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 37,78,778. இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 67,532. மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 3,43,945. இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,890. சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,185. மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 2,07,508 பேர் பெண்கள் 1,36,408 பேர் மூன்றாம் பாலினத்தவர் 29 பேர். தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,670 பேர்.
பெண்கள் 2,220 பேர். இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,667 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,83,937 பேர். இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 120 பேர் உயிரிழந்தனர். இதில் 36 பேர் தனியார் மருத்துவமனையிலும், 84 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 5,886 ஆக உள்ளது. முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 110 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 10 பேர்.
இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,43,945 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:
அரியலூர்- 1,868, செங்கல்பட்டு – 21,151, சென்னை – 1,17,839, கோயம்புத்தூர் – 9,362, கடலூர் – 7,081, தருமபுரி – 1,035, திண்டுக்கல் – 4,910, ஈரோடு – 1,582, கள்ளக்குறிச்சி – 4,972, காஞ்சிபுரம் – 14,035, கன்னியாகுமரி – 7,699, கரூர்1,048 ,கிருஷ்ணகிரி – 1,672, மதுரை – 12,888, நாகப்பட்டினம் – 1,580, நாமக்கல் – 1,287, நீலகிரி – 1,083, பெரம்பலூர் – 975, புதுக்கோட்டை – 4,342, ராமநாதபுரம் – 4,064, ராணிப்பேட்டை – 8,512, சேலம் – 6,185, சிவகங்கை – 3,423, தென்காசி – 4,052, தஞ்சாவூர் – 5,000, தேனி – 10,189, திருப்பத்தூர் – 2,085, திருவள்ளூர் – 20,179, திருவண்ணாமலை – 8,797, திருவாரூர் – 2,390, தூத்துக்குடி – 10,040, திருநெல்வேலி – 7,625, திருப்பூர் – 1,601, திருச்சி – 5,990, வேலூர் – 8,554, விழுப்புரம் – 5,387, விருதுநகர் – 11,400, விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் – 884, விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) – 751, ரெயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் – 428, மொத்தம் – 3,43,945.