மிருகக்காட்சிசாலையில் 19 கொரில்லாகளுக்கு கொரோனா தொற்று…!

அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள மிருகக்காட்சிசாலையில் 19 கொரில்லாக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்பொழுதும் குறைந்தபாடில்லை. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் சிங்கம், குரங்கு என விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா மிருகக்காட்சி சாலையில் உள்ள கொரில்லாக்களுக்கும் தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட கொரில்லாக்களுக்கு லேசான இருமல் மற்றும் மூக்கு ஒழுகுவது போன்ற சில அறிகுறிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவரை 13 கொரில்லாக்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 19 கொரில்லாக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Exit mobile version