ஹிலாரி கிளிண்டனைக் கைது செய்வதற்கான மகத்தான திட்டத்தின் ஒரு பகுதியாக ஜனாதிபதி கோவிட் -19 இருப்பதாக நடித்து வருகிறார் என்று இணையதளத்தில் ஒரு பெரிய வதந்தி பரவி வருகிறது.
டொனால்ட் டிரம்ப் கோவிட் -19 இருப்பதாக நடித்து வருகிறார், தான் குணமடைந்து விட்டதாக கூறி, இந்த வைரஸ் பெரிய விஷயமல்ல என்று சொல்லிக் கொள்ளலாம், டிரம்ப் அடுத்த விவாதத்தைத் தவிர்க்க முயற்சிக்கிறார்; டிரம்ப் தேர்தலை தாமதப்படுத்த விரும்புகிறார்; டிரம்ப் தனது வரி முறைகேட்டில் இருந்து நம்மை திசை திருப்ப முயற்சிக்கிறார் என்றெல்லாம் பல புரளிகள் வருகின்றன.
அவர் மிக அரிதாகவே முகமூடி அணிகிறார் என்பது ஒரு புறம்.
அதிபருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை ஒரு பெரிய அரசியல் யுக்தியாக மக்கள் காண்கின்றனர்.
இணையத்தில், QAnon followers என்ற பிரிவினரே இந்த புரளிகளுக்கு பெரிதும் பங்களிக்கின்றன என்று கூறப்படுகிறது.
இது எந்த அடித்தளமும் இல்லாமல் மக்கள் நம்பும் பல வினோதமான விஷயங்களில் ஒன்று. கொரோனா என்பது ஹிலாரி கிளிண்டன் மற்றும் தாராளவாதப் பிரிவினரால் இயக்கப்படும் சாத்தானை வழிபடும் பெடோஃபைல் வளையத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப வடிவமைக்கப்பட்ட ஒரு புரளி என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
இந்த மேதைகளின்படி, ட்ரம்ப் வெள்ளிக்கிழமை காலை ஒரு ட்வீட் மூலம் தனது நோக்கங்களைத் தெரிவித்தார், அங்கு அவரும் மெலனியாவும் நேர்மறையானதை பரிசோதித்ததாக அறிவித்து, “We Will get through this together” என்று ட்வீட் செய்தாராம் (நாங்கள் இதை ஒன்றாக கடந்து வருவோம் என்று பொருள்). TOGETHER என்ற சொல்லைப் பிரித்தால் To Get Her (அவளைப் பிடிக்க) என்று வருகிறதாம்! எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்…அப்பப்பா!
QAnon இன் பரவல் உலகளவில் செல்வதற்கு முன்பு குறைக்கப்பட்டிருக்கலாம். பேஸ்புக், ட்விட்டர் மற்றும் ரெடிட் ஆகியவை தங்கள் தளங்களில் QAnon இன் இருப்பைக் கட்டுப்படுத்த முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளபோதும், புரளிகள் வந்த வண்ணம் உள்ளன.