மதுரையில் கழிவுகள் கலந்த நுரை பொங்கி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நேற்று முதல் மதுரை பகுதியில் வலுத்த கனமழை பெய்து வந்தது. இதனையடுத்து மூதுரை மாநகரில் உள்ள செல்லூர் கண்மாயில் தொடர்ந்து தண்ணீர் வரப்ப இல்லாமல் இருந்து வந்தது. அதன் பரப்பளவு கிட்டத்தட்ட 240 ஏக்கர் பரப்பளவு என்கிறன்றனர். நேற்று பெய்த கனமழையால் மதுரை சுற்றி பல ஏரிகளும் குளங்களும் நிரம்பியது அதனையடுத்து செல்லூர் கண்மாயும் பல வருடங்கள் கழித்து நீர் நிரம்ப காணப்பட்டது.
செல்லூர் கண்மாயில் பல வருடங்களாக தண்ணீர் இல்லாத காரணத்தினால் அங்கு கழிவு நீரானது தேங்கி உள்ள நிலையில் நேற்று மழைநீரானது வந்து நிரம்பியுள்ளது. அதனால் இரண்டு தென்னீரும் கலந்து அங்கு நுரையானது தோன்றியது. நேரம் ஆகஆக மேகமூட்டம் போல் கூட்டம் கூட்டமாக நுரை பொங்கி காற்றுடன் அடித்து செல்ல நேர்ந்தது. இதனால் அச்சம் அடைந்த போது மக்கள் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி அங்கு வந்த தீயணைப்பு துறையினர் அங்கு இருக்கும் நுரையை நீக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த நுரையானது எந்த வித ரசாயனம் கலந்ததால் ஏற்படவில்லை அது இயற்கையாக தோன்றியுள்ளது என மக்களுக்கு புரியவைத்தனர். மேலும் இது முதல் முறை இல்லை என்றும் இதற்கு முன் மழை பொழிந்த போதும் இதேபோல் நுரை தோன்றியதை பொது மக்கள் உறுதி செய்தனர்.
அதனை தொடர்ந்து அங்குள்ள அறியவள் ஆராய்ச்சியாளர்கள் இந்த நுரையின் காரணமானது அங்கு பல வருடங்களாக தேங்கி கிடந்த கழிவு நீருடன் சுத்தமான மழை நீர் கலந்து தான் இதற்கு காரணமாக இருக்கலாம், மேலும் இந்து நுரையானது எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் கூறியுள்ளனர்.