பிரபல இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யபிடம் போலீஸார் 8 மணிநேரம் விசாரணை.
பிரபல இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யபிடம் போலீஸார் 8 மணிநேரம் விசாரணை.
நடிகர் சுஷாந்த சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக நடிகை கங்கான ரானாவத் பாலிவுட்டில் வாரிசி அரசியல் இருப்பதாகக் குற்றம்சாட்டினார். இதையடுத்து சுஷாந்தின் வழக்கில் திடீர் திருப்பமாக அவரது காதலி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் சில முன்னணி நடிகைகளின் பெயரும் அடிபடும் நிலை இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷல் பாலியல் புகார் அளித்திருந்தார்.
அதில் தம்மை பலவந்தப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ள நடிகை பாயல் இதுகுறித்துப் பிரதமர் அலுவலத்திலும் காவல்நிலையத்திலும் புகார் அளித்திருந்த நிலையில் மகாராஷ்டிர ஆளுநரையும் சந்தித்து கோரிக்கை விருத்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து போலிஸார் நேற்று இயக்குநர் அனுராக் காஷ்யப்பிடம் சுமார் 8 மணிநேரம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்குப் பின் அவரிடம் வாக்குமூலம்பெறப்பட்டதாகத் தகவல் வெளியாகிறது.