டெல்லியில் உள்ள AIIMS மருத்துவமனையில் சிகிச்சைக்காக மத்திய அமைச்சர் அமித்ஷா சேர்க்கப்பட்டுள்ளார் ,மருத்துவமனை மருத்துவர் குழு தற்போது தொடர்ந்து அமித் ஷாவின் உடலை பரிசோதித்து வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி கொரொனா காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, ஆகஸ்ட் 14 ஆம் தேதி குணம் அடைந்தார். பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
பின்னர் வீட்டில் தனிமை படுத்தி கொண்ட அமித்ஷா, மீண்டும் கொரோனாவிற்கு பின்பான சிகிச்சை எடுத்துக் கொண்டு AIIMS மருத்துவமனை யில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
தற்போது அவர் மீண்டும் டெல்லியில் இருக்கும் AIIMS மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்
மருத்துவமனை மருத்துவர் குழு தற்போது தொடர்ந்து அமித் ஷாவின் உடலை பரிசோதித்து வருகின்றனர்.
இவரின் உடல்நிலை குறித்து விவரம் இன்னும் வெளியாகவில்லை.உடல் பரிசோதனைக்காகதான் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.