சோமாலியாவின் தலைநகரில் உள்ள ஒரு போலீஸ் தலைமையகத்திற்கு வெளியே வாகனம் வெடித்ததில் 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 11 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று சோமாலியாவின் போலீஸ் மற்றும் சுகாதார அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். அல்-ஷபாப் தீவிரவாதக் குழு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
காவல்துறை செய்தித் தொடர்பாளர் கர்னல் அப்திகானி முகமது கலஃப், தற்கொலை குண்டுதாரி முன்னாள் கட்டுப்பாட்டு அஃப்கோய் சாலைக்கு அருகிலுள்ள தலைமையகத்திற்குள் செல்ல முயன்றார். ஆனால் அது முறியடிக்கப்பட்டது.
இல்லையெனில் தற்கொலை குண்டுதாரி அதிகமான மக்களைக் கொன்றிருக்கலாம் என்று கலாஃப் கூறினார். இறந்தவர்களில் இரண்டு வீரர்களும் மூன்று பொதுமக்களும் அடங்குவதாக அவர் கூறினார். மதீனா மருத்துவமனையில் டாக்டர் ஹாஷிம் சுல்தான் 13 காயமடைந்தவர்களைப் பெற்றதாகவும், அவர்களில் இருவர் இறந்துவிட்டதாகவும் கூறினார். மற்றவர்களுக்கு சிறு காயத்திலிருந்து கடுமையான காயம் வரை ஏற்பட்டுள்ளது.
அல்-ஷபாப் பெரும்பாலும் மொகாடிஷுவின் உயர்மட்ட பகுதிகளை குறிவைக்கிறது. மேலும் அல்-கைதாவுடன் இணைந்த குழுவான இது சோமாலியாவின் தற்போதைய அரசியல் பதட்டங்களை பயன்படுத்தி மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மொஹமட் அப்துல்லாஹி மொஹமட் அதிகாரத்தில் நீடித்திருப்பது தொடர்பாக ஏற்பட்ட சண்டையின் மத்தியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெருக்களில் மோதிக்கொண்ட போட்டியாளர்களின் குழுக்கள் காரணமாக, இந்த வாரம் பல்லாயிரக்கணக்கான மொகாடிஷு குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இப்போது மத்திய அரசாங்கமும் பிராந்திய மாநிலங்களும் தேர்தலை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து விரைவில் பேச்சுவார்த்தைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 30 ஆண்டுகால மோதலில் இருந்து மீண்டும் கட்டியெழுப்பப்படுவதால் சோமாலியா பல தசாப்தங்களாக நேரடி ஒரு நபர்-ஒரு வாக்குத் தேர்தலை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.