இறந்ததாகக் கருதப்பட்ட அல்-காய்தா தலைவர் திரையில் தோன்றினார்!!

பெய்ரூட் மற்றும் அமெரிக்க படையால், இரட்டை கோபுர தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட அல் – காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின், அய்மான் அல் ஜவாஹிரி தலைமை பொறுப்பை ஏற்றார். உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளுக்கு முன் அவர் இறந்ததாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், பயங்கரவாத குழுக்களின் இணையதளங்களை கண்காணிக்கும் எஸ்.ஐ.டி.இ., என்ற புலனாய்வு அமைப்பு ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் இறந்ததாகக் கூறப்படும் அய்மான் அல் ஜவாஹிரி பேசுவது போல் அதில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.அதில், ஜெருசலேம் யூதமயமாகும் என்பது நடக்காது எனத் தெரிவித்துள்ள ஜவாஹிரி, ரஷ்ய படைகள் மீது அல் – காய்தா நடத்திய தாக்குதலை பாராட்டியுள்ளார்.

ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவது பற்றியும் பேசியுள்ளார். ஆனால், தலிபான்கள் ஆப்கனை கைப்பற்றியது குறித்து அதில் அவர் எதுவும் பேசவில்லை. இந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து பல்வேறு தரப்பினரும் சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

Exit mobile version