போதைப்பொருள் விவகார நடிகை மருத்துவமனையில் அனுமதி…

நடிகை சஞ்சனா கல்ராணி திடீர் உடல்நலம் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மக்களுக்கு பரிட்சையமான நடிகைகள் சஞ்சனா கல்ராணி மற்றும் ராகிணி திவேதி. இவர்கள் இருவரும் சில மாதங்களுக்கு முன்பு போதை பொருள் பயன்படுத்தியாதகவும், போதைப்பொருள் விற்பனைக்கு உதவி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டனர்.

கடும் விசாரணைக்கு பிறகு இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சஞ்சனா கல்ராணி என்பவர் பிரபல நடிகை நிக்கி கல்ராணி அவர்களின் சகோதரி ஆவார்.

இவர் தமிழில் ரவிபார்கன் இயக்கிய ஒரு காதல் செய்வீர் என்ற படத்தில் நடித்து இருந்தார்.

தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.இதற்கிடையில் இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தி உள்ளனரா என்பதை உறுதி செய்ய இருவரின் தலை முடி தடய அறிவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது.

அதில் இவர்கள் இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தி வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை சஞ்சனா கல்ராணி பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். அதை குறித்து அவர்களின் தாயாரிடம் கேட்ட போது அவரின் உடல்நிலை சரியில்லாததால் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் வேறு எந்த காரணமும் இல்லை என்று கூறியுள்ளார்.

Exit mobile version