நடிகை ரைசா 3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்…. பரபரப்பு நோட்டீஸ்….!!!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரைசா, சமீபத்தில் முக அழகுக்காக ஃபேசியல் செய்ய அழகுக்கலை மருத்துவரிடம் சென்றுள்ளார். அப்போது தேவையற்ற சில ஒப்பனை செயல்முறைகளை அழகுகளை மருத்துவர் செய்துள்ளார்.

அதனால் தனது முகத்தின் ஒரு பக்கம் வீங்கி இருப்பதாக இன்ஸ்டாகிராமில் ரைசா தெரிவித்துள்ளார். மேலும் அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றதாகவும், அவர் தன்னை சந்திக்க மறுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமன்றி இதுபோன்ற தவறை இனி யாரும் செய்ய வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து முகப்பொலிவு சிகிச்சையை தவறாக செய்ததால் முகம் வீங்கியதாக கூறி ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மருத்துவர் பைரவி செந்திலுக்கு நடிகை ரைசா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ரூ.127 லட்சம் செலுத்தி சிகிச்சை எடுத்தும் முகப்பொலிவு பெறாமல் ரத்த கசிவு, வீக்கம் தான் ஏற்பட்டது. பைரவி அளித்த சிகிச்சையால் பாதிக்கப்பட்ட நிலையில், 15 நாட்களுக்குள் நஷ்ட ஈடு வழங்காவிட்டால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

இதனையடுத்து தவறான சிகிச்சை என அவதூறு பரப்பிய நடிகை ரைசா மூன்று நாளில் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்கவேண்டும் என மருத்துவர் பைரவி செந்தில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

வாடிக்கையாளர்கள் மத்தியில் உள்ள நல்ல பெயரை சீர்குலைக்கும் நோக்கில் நடிகை நாடகம் செய்கிறார். அவருக்கு ஏற்பட்டது பயப்படக்கூடிய அளவிலான பக்கவிளைவுகள் இல்லை. அரிதாக ஏற்படக் கூடியது எனவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version