நடிகர் சூரியிடம் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.70 கோடி மோசடி செய்ததாக 2 பேர் மீது வழக்குப் பதிவு.
நடிகர் சூரியிடம் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.70 கோடி மோசடி செய்ததாக 2 பேர் மீது வழக்குப் பதிவு.
பிரபல நடிகர் சூரியிடம் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.70 கோடி மோசடி செய்ததாக2 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீர தீரன் பட தயாரிப்பாளர் அன்புவேல் , ராஜன், ரமேஷ் என்பவர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு வீர தீரன் என்ற திரைப்படம் சம்பந்தமாக நடிகர் சூரிக்கு ரூ. 40 லட்சம் சம்பளம் பாக்கி இருந்துள்ளது. இதை நடிகர் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் தயாரிப்பாளர்களான அன்புவேல் , ராஜன், ரமேஷ்ஆகியோர் சம்பளம் தர மறுத்துள்ளதாகவும் தற்போது போலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூரி அடையாறு காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் மூலம் போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நிலம் மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள தயாரிப்பாளர் நடிகர் விஷணூ விஷாலில் தந்தையும் முனாள் தீயணைப்புத்துறை டிஜிபியுமான ரமேஷ் குடவாலா என்பது குறிப்பிட்டத்தக்கது. அவர் மீது 5 பிரிவுகளில் போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.