கள்ள காதலனோடு ஜாலியாக இருந்த மனைவி… நேரில் பார்த்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்…!!

கள்ள காதலனோடு ஜாலியாக இருந்த மனைவி… நேரில் பார்த்த கணவனுக்கு கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.

கள்ளக்காதல் ஜோடிகள் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்டுவது ட்ரெண்டாகிவிட்டது. கோவையில் ஒரு பெண் கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொன்று மண்ணை போட்டு மூடிய சம்பவம் அதிரவைத்துவிட்டது. கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியில் செயல்பட்டுவரும் கோலப்பொடி பேக்கிங் செய்யும் கம்பெனியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் அங்கு தங்கி வேலை பார்த்து வருகிறார்.  அங்கு வேலைபார்க்கும் நாகராஜ் என்பவரின் மனைவி அமுதாவிற்கும் சங்கருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்றும் நள்ளிரவு 12:30 மணியளவில் கம்பெனியில் அமுதாவும் சங்கரும் தனிமையில் இருந்துள்ளனர்.

இதனை கண்ட நாகராஜ் இருவரையும் தாக்க முற்பட்டுள்ளார். அப்போது சங்கர் அங்கிருந்த சுத்தியை கொண்டு தாக்கியதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். உயிரிழந்த கணவன் நாகராஜை கள்ளக்காதல் ஜோடி அமுதாவும், சங்கரும் கம்பெனியின் பின்புறம் மண்ணை போட்டு மூடியுள்ளனர்.

இந்நிலையில் அதிகாலை இச்சம்பவத்தை அறிந்த கம்பெனியின் உரிமையாளர் மயில்வாகனம் மதுக்கரை போலீசில் தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அமுதாவையும் சங்கரையும் கைது செய்தனர். இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவர்.

Exit mobile version