17 வயது சிறுமியை மிரட்டி 3 வருடமாக கற்பழித்த 30 பேர்…கொடூர சம்பவம்…!!

17 வயது சிறுமியை மிரட்டி 3 வருடமாக கற்பழித்த 30 பேர் கொடூர சம்பவம் நடந்துள்ளது.

17 வயது சிறுமியை 30 பேர் 2 வருடமாகவே தொடர்ந்து நாசம் செய்து வந்துள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு கொடுமை தலைநகரில் நடந்துள்ளது. எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கும் சிறுமி வறுமையால் படிக்க முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அம்மா வேலைக்கு சென்றுவிட்ட பிறகு, தனியாக இருக்கும் சிறுமியை காதலிக்கிறேன் என்ற பெயரில் தானும் பலவந்தமாக சீரழித்து தனது நண்பர்களுக்கும் விருந்தாக்கி, கர்ப்பமான அந்த சிறுமியை மிரட்டி அபார்ஷன் செய்துள்ளனர். இந்த விஷயத்தை எல்லாம் வெளியில் சொன்னால், அம்மாவை கொன்றுவிடுவதாக சிறுமியை மிரட்டியே பலமுறை கற்பழித்துள்ளனர்.

சென்னை தாம்பரம் அடுத்துள்ள பகுதி கௌரிவாக்கம். இங்கு வசித்து வருபவர் கார்த்திக் செண்டிரிங் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை 3 வருடமாக காதலித்து வந்துள்ளார். அம்மா வீட்டு வேலை செய்து தான் அந்த சிறுமியை வளர்த்து வந்துள்ளார். குடும்ப நிலைமை தெரிந்தும், கார்த்திக் அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை காட்டி பலமுறை உல்லாச உறவில் இருந்துள்ளார். மேலும், அந்த சிறுமியிடம் உடலுறவில் இருந்தபோதெல்லாம் அதை வீடியோவும் எடுத்தும் வைத்து கொண்டார் கார்த்திக்.

இந்த வீடியோ பற்றி தன்னுடைய நண்பர் மணிகண்டனுக்கு சொல்லி உள்ளார். பனங்காட்டு படை கட்சி கெளரிவாக்கம் மாவட்ட செயலாளர்தான் இந்த மணிகண்டன் என்பவராம். உடனே மணிகண்டனும், கார்த்திக்கும் அந்த வீடியோவை சிறுமியிடம் காட்டி, இருவரும் பலவந்தமாக சிறுமியை சீரழித்துள்ளனர்.  இரண்டு காம கொடூரர்கள் மணிகண்டனும், கார்த்திக்கும் அந்த வீடியோவை தங்களுடைய தொழில் நண்பரான ரியல் எஸ்டேட் செய்து வருபவரும் தனசேகரிடம் காட்டினார்களாம், திமுக தாம்பரம் சட்டமன்ற தொகுதி சோஷியல் மீடியா பொறுப்பாளராம்.

பிறகு 3 பேருமாக அந்த பெண்ணை சீரழித்துள்ளனர் அந்த பெண்ணை அணுஅணுவாக சிதைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு சிறுமி கர்ப்பம் ஆகிவிட இந்த விஷயம் தெரிந்ததும், இந்த 3 பேரும் சேர்ந்து சிறுமியை மிரட்டியே அபார்ஷன் செய்ய வைத்துள்ளனர். பல கொடுமைகளை அனுபவித்த அந்த சிறுமி டார்ச்சர் தாங்க முடியாமல், தனது அம்மாவிடம் நடந்ததை எல்லாம் சொல்லி அழுதுள்ளார். சமூக ஆர்வலர் ஒருவரிடம் சொல்லி தாம்பரம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார்  கொடுக்க வழக்கு பதிவு செய்தது வலைவீசி தேடிய போலீசார், கார்த்திக், மணிகண்டனை கைது செய்து புழல் சிறையில் அடைத்து  வைத்துள்ளனர்.

Exit mobile version