ஐபிஎல் போட்டிகளை மையமாக வைத்து மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரின் கனடியா எனும் பகுதியை சேர்ந்த சிலர் தற்போது நடந்து வரும் ஐபில் போட்டியை மையமாக கொண்டு சிலர் சட்ட விரோதமான செயலில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டதால் அதன் தகவல் அறிந்து அங்கு போலீசார் சென்றனர். மேலும் அங்கு கண்காணிப்பு பணியையும் தீவிரப்படுத்தி உள்ளனர்.
பின்னர் நேற்று அவர்களுக்கு தரப்பட்ட தகவலானது உண்மை என்பதை போலீசார் அவர்களில் கண்காணிப்பின் மூலம் உறுதி செய்துள்ளனர். அதனை தொடர்ந்து அங்கு 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சூதாட்டத்திற்குப் பயன்படுத்திய 15 செல்போன்கள் 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஒரு சம்பவம் கடந்த 11ம்தேதி இந்தூர் ராஜேந்திரா நகரிலும் நடந்துள்ளது அங்கும் தங்கள் அறிந்து விரைந்த போலீசார் ஆறு நம்பர்களை கைது செய்தனர்.