கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த வழக்கறிஞர்களுக்கு 50 லட்சம்; உச்சநீதிமன்றம் கண்டனம்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 60 வயதிற்கும் குறைவான வழக்கறிஞர்களின் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி தொடரப்பட்ட மனுவை 10,000 ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்தது
பிரதீப் குமார் யாதவ் என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தரசூட் தலைமையிலான அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. கொரோனாவால் நாடு முழுவதும் ஏராளமானோர் உயிரிழந்திருக்கிறார்கள் எனவே வழக்கறிஞர்களின் உயிர் என்பது மற்றவர்களைத் உயிரை விட உயர்வானது ஒன்றும் கிடையாது எனக் கூறிய நீதிபதிகள் கருப்பு அங்கி அணிந்து இருக்கிறீர்கள் என்பதற்காக மட்டும் சிறப்பு சலுகைகள் வழங்க முடியாது என கோபத்துடன் கூறினார்.
மேலும், இது பொது நல மனுவாக தங்களுக்கு தெரியவில்லை என்றும் விளம்பரம் தேடக்கூடிய மனுவாக தான் பார்க்க வேண்டியிருக்கிறது என்றும் இத்தகைய நேரம் விரயம் செய்யக் கூடிய மனுக்களை வழக்கறிஞர்கள் தாக்கல் செய்வதை உடனடியாக தடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது எனக் கூறி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.