கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக் கடன் தள்ளுபடி: முதலமைச்சர் அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரன் வரை அடகு வைத்து சாமானிய எளிய மக்கள் பெற்ற கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தெரிவித்த முதலமைச்சர், உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகைக் கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்கள் குறித்து 51 விதமான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. கூட்டுறவு வங்ககளில் நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்கள் கடந்த ஒரு மாத காலமாக சேகரிக்கப்பட்டது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறிய முக்கியமான வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version