இரு நாடுகளின் குறிப்பிட்ட துறை சார்ந்த விவகாரங்கள் குறித்து இரண்டு நாட்டின் அமைச்சர்களும் நேர் எதிரே சந்தித்து பேசி கொள்வது தான் “டு பிளஸ் டு” ஆலோசனை கூட்டம் என்பார்கள். பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதும் , முக்கிய முடிவுகளை எடுப்பதற்கும் இத்தகைய கூட்டத்தை இந்திய உட்பட பல நாடுகள் முன்னெடுக்கிறது.
இன்று டெல்லியில் நடைபெறவுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2+2 ஆலோசனை கூட்டம் என்பது இந்திய ஆஸ்திரேலியா பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் இடையே நடைபெறுகிறது. இதற்காக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மாரிஸ் பெயின் ஆகியோர் இன்று காலை 10.30 மணி அளவில் இந்தியா பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேசுகின்றனர். சந்திப்பின் போது இரு நாடுகளுடைய பொருளாதாரம் , பருவநிலை , இணைய பாதுகாப்பு , தொழில்நுட்ப ஒப்பந்தம் , இரு நாடுகளுக்கு இடையேயான ஏற்றுமதி / இறக்குமதி தொடர்பாக ஆலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மிக முக்கியமாக கிழக்கு – தென் சீன கடலின் பாதுகாப்பு குறித்தும் , ஆப்கான் நிலவரத்தின் பாதுகாப்பு தொடர்பாகவும் பேசிக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்த சந்திப்பை தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் பிரதமர் மோடியை மரியாதை நியமித்தமாக சந்தித்து பேசுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.