கொரோனா வைரஸ் காரணமாக, உலகம் முழுவதும் இதுவரை, 1,000 செவிலியர் உயிரிழந்திருக்கிறார்கள்’ என, செவிலியருக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனவால் உலகளவில் மொத்தம் இரண்டு கோடி பேர்கள் உயிரியந்துள்ளனர். இதனால் உலக நாடுகள் முழுவதும் பெரும் பொருளாதார வீழ்ச்சியை அடைந்துள்ளது. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இதனால் பாதிப்பு அதிகரிக்கிறது.பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக சந்தித்து சிகிச்சை அளிப்பதில் செவிலியர்களின் பங்கு மிக முக்கியமானது.
உலகளவில் மொத்தம் 2 கோடி செவிலியர்கள் கொரோன சேவையில் ஈடுபட்டு வருகின்றவர்கள். இதனால் அவர்களுக்கும் கொரோன தொற்றுவர வாய்ப்பு இருக்கின்றது. இதுபோல் பாதிக்கப்பட்டு 1000 செவிலியர்கள் இறந்துள்ளனர்.
இந்த கொரோனவால் பல செவிலியர்கள் தன் குடும்பத்தையும் உறவினர்களையும் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களின் சேவை தன்னிகரற்ற சேவை. இப்போது இதனை செவிலியர்கள் உயிரிழந்துள்ள செய்தி அனைவருக்கும் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.