கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ல குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் தினசரி ஐந்தாயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக குருவாயூர் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக உலகெங்குமுள்ள வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டிருந்தன. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தற்போது பக்தர்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வருவது வழக்கம். கொரோனா தொற்று குறைவிற்கு பிறகு நாளொன்றுக்கு 2 ஆயிரம் பக்தர்கள் வீதம் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதுகுறித்து தேவஸ்தானம் வெளிட்டுள்ள அறிக்கையில், இரண்டாயிரம் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டு வந்த நிலையில் முன்பதிவு செய்த பக்தர்கள் பலர் வருவதில்லை. இதைக் கருத்தில் கொண்டு நாளொன்றுக்கு 5 ஆயிரம் பக்தர்கள் வீதம் அனுமதிக்கப்பட உள்ளனர். அதேபோல நாளொன்றுக்கு பத்து திருமணங்கள் வீதம் நடத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பறறி பக்தர்கள் வழிபாட்டிலும், திருமணத்திலும் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளது.