1.20 கோடி தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசு முடிவு

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் வேகம் அதிகப்படுத்தப்பட்டு வருகிறது.

மத்திய-மாநில அரசுகளும் தடுப்பூசி போடும் பணியை அதிகப்படுத்த பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. மேலும் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் இருந்து 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு நேரடியாக கொள்முதல் செய்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி, மத்திய அரசின் தொகுப்பிலிருந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு 65,00,99,080 டோஸ்கள் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது மாநிலங்கள் வசம் 4,36,81,760 கோடி டோஸ்கள் தடுப்பூசிகள் இருப்பு உள்ளன. மேலும் மத்திய அரசின் தொகுப்பில் இருந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக விரைவில் 1,20,95,700 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version