உ.பி. மாநிலத்தில் சட்டவிரோத மதமாற்றத்திற்கு தண்டனை வழங்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
லக்னோ:
“லவ் ஜிகாத்”என்னும் மதம் மாறுதலை தடுக்கும்வகையில் புதிய வரைவு சட்டமசோதா உத்தர பிரதேச அமைச்சரவையில் உருவாக்கப்பட்டு இந்த வாரத் தொடக்கத்தில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, நேர்மையற்ற முறையில் மதம் மாறுதல், சட்டவிரோத மதமாற்றம், “லவ் ஜிகாத்” ஆகியவற்றைத் தடுக்க கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டத்துக்கு உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
இதையடுத்து, லக் ஜிகாத் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக பத்து ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என அவசரச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அதுபோன்று நடத்தப்படும் திருமணம் சட்டப்படி செல்லாது என்று அறிவிக்கப்படும்,திருமணத்திற்காக ஒரு மதத்தில் இருந்து வேறு ஒரு மதத்திற்கு மாறிய பெண் தன்னுடைய மதத்தை மாற்ற விரும்பினாலும் அது சட்டப்படி ஏற்கமுடியாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.