கொரோனா பயத்தால் ஆம்புலன்ஸில் ஏற்ற மறுத்த ஊழியர்கள்… நண்பரின் பைக்கில் அழைத்துச்சென்று தாயை காப்பற்ற முடியாமல் போன சோகம்…

உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணை ஆம்புலன்ஸில் ஊழியர்கள் ஏற்ற மறுத்ததால் அந்த பெண் உயிரிழந்த சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம் கில்லோய் கிராமத்தை சேர்ந்த 50 வயதான செஞ்சுலம்மா. இவருக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அந்த மகன் நண்பரின் உதவியுடன் தனது தாயை பைக்கில் உட்கார வைத்துக்கொண்டு, பலாசாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

இந்தநிலையில், அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் செஞ்சுலம்மா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் மகன் அவசர ஊர்திக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், அவர்கள் கொரோனா அச்சம் காரணமாக சடலத்தை கொண்டு செல்ல முன்வரவில்லை.

Read more – ஒரே ஆம்புலன்ஸில் திணிக்கப்பட்ட 22 சடலங்கள்… மகாராஷ்டிராவில் ஏற்பட்ட சோக நிலை..

தனது தாய்க்கு கொரோனா இல்லை என்று கெஞ்சியபோதும், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஏற்ற மறுத்து வந்த வழியில் திரும்பி சென்றுள்ளனர். வேறு வழி தெரியாததால் தனது நண்பரை பைக் ஓட்டும்படி கூறிவிட்டு பைக்கிலேயே தனது தாயின் சடலத்தை உட்கார்ந்த நிலையில் வைத்துக் கொண்டு தாயின் சடலத்திற்கு மாஸ்க் அணிவித்து சொந்த ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்துள்ளார்.

Exit mobile version