திமுக எம்.பிக்களை அவமதிப்பு செய்த புகாரில் தமிழக முன்னாள் தலைமை செயலாளர் சண்முகம் இன்று டெல்லியில் நாடாளுமன்ற உரிமை குழு தலைவர் சுனில் குமார் சிங் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா சமயத்தில் “ஒன்றிணைவோம் வா” எனும் திட்டத்தின் மூலம் மக்களிடம் இருந்து திமுக பெற்ற 1 லட்சம் மனுக்களை அப்போதைய தமிழக தலைமை செயலாளர் சண்முகத்திடம் ஒப்படைக்க திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு, எம்.பிகள் தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் நேரில் சென்றனர். அப்போது, எம்.பி-களை முறைப்படி வரேவற்று அமர கூட சொல்லவில்லை எனவும், ஒப்படைக்கப்பட்ட மனுக்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்? என கேள்வி எழுப்பட்ட போது ‘எப்போது நடவடிக்கை என்பதை கூறமுடியாது’ என தலைமை செயலாளர் கனத்த குரலில் கூறியதாக திமுக எம்.பி-கள் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், இதற்கு தலைமை செயலாளர் சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இல்லையென்றால் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்வோம் என எம்.பி-கள் கூறி இருந்தனர். இருப்பினும், முன்னாள் தலைமை செயலாளர் சண்முகம் அவமதிப்பு செய்ததாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு விளக்கம் மட்டுமே அளித்த நிலையில் அவற்றிக்கு மன்னிப்பு கேட்காத காரணத்தினால் அவற்றை நாடாளுமன்ற தலைவரிடம் எம்.பி-கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவற்றை நாடாளுமன்ற உரிமை குழுவு விசாரிக்க பரிசீலனை செய்யப்பட்டதையடுத்து செப்டம்பர் 24ம் தேதி உரிமை குழுவிடம் எம்.பி-கள் நேரில் ஆஜராகி விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்தனர்.
அதன் பின்னர் அவற்றை விசாரணைக்கு ஏற்று கொண்ட உரிமை குழு, இன்று ( செப் 23,2021 ) முன்னாள் தலைமை செயலாளர் சண்முகத்தை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கூறி இருந்தனர். இந்நிலையில், நேற்று டெல்லி வந்த முன்னாள் தலைமை செயலாளர் சண்முகம் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள உரிமை குழுவின் அலுவலகத்தில் தலைவர் சுனில் குமார் சிங் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். திமுக எம்பிகளை அவமரியத்தையுடன் நடத்தப்பட்டதாக கூறப்படும் புகார் தொடர்பாக அன்றைய தினம் என்ன நடந்து என்பது தொடர்பாக முன்னாள் தலைமை செயலாளர் சண்முகம் விளக்கம் அளித்தார் என தகவல் தெரிவிக்கிறது.