மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஒரே வீட்டில் இரண்டாவது முறையாக திருடச்சென்ற கும்பல் போலிஸாரிடம் சிக்கியுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் புனேவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புனே நகரில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் கடந்த ஜூலை 30 ஆம் தேதி கொள்ளையடிக்க முயன்ற இருவரை போலிஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் அதே வீட்டில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் 50 லட்சம் திருடி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்தில் இருவரும் வீடு, கார் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் தற்போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இது பற்றி வீட்டு உரிமையாளரிடம் விசாரித்ததில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் 50 லட்சம் கொள்ளை போனது உண்மைதான் என்றும், ஆனால் மனைவி வருத்தப்படுவார் என 5 லட்சம் தான் திருடுப்போனதாக புகார் கொடுத்ததாகவும் கூறினார். இந்த கொள்ளை சம்பவமானது புனேவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.