மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி…மம்தா மகிழ்ச்சி…!!

294 பேரவைத் தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 206 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது.

புதுடெல்லி:

மேற்கு வங்கத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்க உள்ளது.

இன்று மொத்தமுள்ள 294 பேரவைத் தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் 206 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. பாஜக 83 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும், பிற கட்சிகள் 2 இடத்திலும் முன்னிலையில் உள்ளன.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றியை நோக்கி செல்லும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜிக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version