அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு தவு தயால்,இக்பால் என்ற இருவரும் சேர்ந்து தான் 2100 கிலோ எடைக் கொண்ட மணியை உருவாக்கியுள்ளனர்.இதன் ஒலி 15 கி.மீ தொலைவு வரை கேட்கும் திறன் உடையது.இவ்வளவு அதிக எடைக் கொண்ட மணியை தயாரித்தது இதுவே முதன்முறை.
உத்தர பிரதேச மாநிலம் ஜலேசர் மாவட்டத்தை சேர்ந்த தவு தயால்,இக்பால் என்ற நண்பர்களே (கலைஞர்களே)இந்த மணியை வடிவமைத்தவர்கள்.இவர்கள் இருவரும் 30 வருடங்களாக இப்பணியை செய்து வருகின்றனர்.ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிறகு இவர்களது படைப்பே உலகிற்கு பேசுப்பொருளாக அமைந்துள்ளது.
இவ்வாறு நிபுணத்துவம் பெற்றிருந்தாலும்,உருக்கிய உலோக்கத்தை ஊற்றுவதற்கு 5 விநாடி காலத்தாமதம் ஆனாலும் முழுவதும் வீணாகி விடும்.எனவே மிகுந்த கவனத்துடன்,எந்தவித பதற்றமும் இல்லாமல் செய்ததாலேயே இவ்வளவு சிறப்பாக வந்துள்ளது என்கின்றனர் தவு தயால் மற்றும் இக்பால்.
இது தனித்தனியான பாகங்களாக உருவாக்கப்படாமல் ஒரே உலோகக் கலவையால் வடிவமைக்கப்பட்டுள்ளதே இதன் சிறப்பாகும்.இந்த மணியாணது தங்கம்,வெள்ளி,துத்தநாகம்,லெட்,செம்பு,டின்,இரும்பு போன்றவற்றால் உருவாக்கப்பட்டுள்ளது.