பொய் சொல்லி பரப்புறாங்க…! ரொம்ப பயமா இருக்கு… அரசுக்கு OK சொல்லி ட்விட்டர் நடவடிக்கை…!!

கொரோனா இரண்டாவது அலை குறித்து அரசை விமர்சனம் செய்யும் வகையிலான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையை அரசு சரியாக புரிந்து கொண்டு செயலாற்றாமல் இருந்ததே கொரோனா தொற்று அதிகரிப்பிற்கு காரணம் என ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அரசை விமர்சித்து சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கொரோனா தொற்று குறித்த தவறான தகவல் மற்றும் பயத்தை பரப்பும் வகையில் பதிவிடப்பட்ட பதிவுகளை நீக்க மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து விளக்கமளித்த ட்விட்டர் நிறுவனம் அரசு வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தவறான தகவல் பரப்பிய ட்விட்டர் கணக்காளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருந்த நிலையில் அரசுக்கு எதிராக பதிவிடப்பட்ட 52ட்வீட்டுக்கள் நீக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version