3 பாராளுமன்ற இடங்கள், 30 சட்டமன்ற இடங்களுக்குமான இடை தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லி, கொரோனா பெருந்தொற்று காரணமாக நடைபெறாமல் இருந்த இடை தேர்தல்களின் மீது இந்திய தேர்தல் ஆணையம் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. அதன்படி, இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 3 பாராளுமன்ற இடங்களுக்கும் 14 மாநிலங்களில் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை அறிவிர்த்துள்ளது.
பாராளுமன்ற தேர்தலானது மத்திய பிரதேசம் , ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் யூனியன் பிரதேசமான தாத்ரா நகர் ஹவேலி உள்ளிட்டவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல், ஆந்திர பிரதேசத்தில் 1 சட்டமன்ற தொகுதிக்கும் , அசாம் மாநிலத்தில் 5 தொகுதிகள், பீகாரில் 2 தொகுதி , ஹரியானா 1 தொகுதி , ஹிமாச்சல் பிரதேசத்தில் 3 தொகுதி , கர்நாடகாவில் 2 தொகுதி , மத்திய பிரதேசத்தில் 3 தொகுதி , மகாராஷ்டிரா 1 தொகுதி , மேகாலயா மாநிலத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளுக்க்கு இடை தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும், மிசோரம் 1 தொகுதி, நாகாலாந்து 1 தொகுதி, ராஜஸ்தான் 2 தொகுதி , தெலங்கானா 1 தொகுதி மற்றும் மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகள் என மொத்த 14 மாநிலங்களில் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற இடை தேர்தலுக்கான வேட்புமனு வரும் 1ம் தேதி முதல் தொடங்கி 8ம் தேதியுடன் முடிவடையும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அக் 11ம் தேதியும், அக் 30ம் தேதி 30 சட்டமன்ற தொகுதிகளும் இடை தேர்தல் ( வாக்கு பதிவு ) நடைபெறவுள்ளது. பின்னர், நவம்பர் 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.