கொரோனா பாதிப்பால் மரணமடைந்த சீதாராம் யெச்சூரியின் மகன்…

கொரோனா தொற்று காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஸ் யெச்சூரி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி செயல்பட்டு வருகிறார். மூத்த மகனான ஆஷிஸ் யெச்சூரி முன்னணி செய்தித்தாள் பத்திரிகையில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த வாரம் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Read more – ஆக்சிஜன் இல்லையா ? பிச்சை எடுத்தோ, திருடியோ நோயாளிகளை காப்பாற்றுங்கள்.. மத்திய அரசை வெளுத்து வாங்கிய டெல்லி உயர் நீதிமன்றம்

இந்தநிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த ஆஷிஸ் யெச்சூரி இன்று காலை 6 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரின் மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து, சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது :

எனது மூத்த மகன் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று காலை உயிரிழந்துவிட்டார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும் எனது மகனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றி என்று பதிவிட்டிருந்தார்.

Exit mobile version