ஆண் குழந்தைகளுக்கு நாய்களுடன் திருமணம் செய்து வைக்கும் பழங்குடியின மக்களின் வினோத நம்பிக்கை பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா:
ஒடிசா மயூர்பஞ்ச் அருகே மூட நம்பிக்கை காரணமாக பழங்குடியின மக்கள் வித்தியாசமான முறையில் இரு ஆண் குழந்தைகளை நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
Read more – துக்க சடங்கு வீட்டில் மேலும் ஒரு துயரம் : தேனீக்கள் கொட்டியதால் ஒருவர் பலி
கம்பாரியா எனும் கிராமத்தில் பழங்குடியின மக்களிடையே இந்த சடங்கு ஆண்டுதோறும் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு மேல் ஈறுகளில் பல் முளைக்க துவங்குவதை கெட்ட சகுனமாக கருதி அதற்கு சடங்கு செய்கிறார்கள்.
தற்போது இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.