தேர்தலில் போட்டியிட சீட் வழங்காததால் மொட்டையடித்த காங்கிரஸ் தலைவி..

கேரள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் கேரள மாநில காங்கிரஸ் தலைவி மொட்டையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் :

கேரள மாநில மகளிர் காங்கிரஸ் தலைவியாக பணியாற்றி வரும் லத்திகா சுபாஷ் கேரள சட்டமன்ற தேர்தலில் எட்டுமண்ணூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

Read more – மிக பெரிய வெற்றி பெறுவேன், வெற்றியை மோடியின் கையில் தருவேன் : குஷ்பு பேட்டி

ஆனால், வெளியிடப்பட்ட இந்த காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் லத்திகா சுபாஷ் பெயர் இடம்பெறாததை தொடர்ந்து அதிருப்தி அடைந்த அவர், தனது பதவியை ராஜினாமா செய்து கட்சி வளாகத்தில் தலைக்கு
மொட்டையும் அடித்து காங்கிரஸ் கட்சிக்கு தனது எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார். இது அங்கிருந்த காங்கிரஸ் உறுப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version