வலிப்பு நோயை குணப்படுத்தவே புருஷோத்தம் – பத்மஜா தம்பதி இரண்டு மகள்களையும் நரபலி கொடுத்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சிவநகரில் வசித்து வருபவர் புருஷோத்தம் நாயுடு – பத்மஜா தம்பதியினர். புருஷோத்தம் நாயுடு மகளிர் டிகிரி கல்லூரியின் துணை முதல்வராகவும், அவரது மனைவி பத்மஜா ஒரு தனியார் கல்வி நிறுவனத்தின் பேராசிரியராக பணி புரிந்து வருகின்றனர். இவர்களின் மூத்த மகள் அலேக்யா (27) ( மேனேஜ்மென்ட் ஆஃப் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் ) படித்து வந்தார். சாயி திவ்யா (22) ஏ ஆர் ரகுமான் இசை கல்லூரியில் படித்து வந்தார்.
கொரோனா ஊரடங்கு நேரத்தில் கடந்த 8 மாதங்களாக வீட்டிலேயே பெற்றோருடன் தங்கி வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வீட்டில் பூஜைகள் செய்து அற்புதங்கள் நடத்துவதாக கூறி பூஜைகள் செய்து வழிபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு வீட்டில் பூஜைகள் செய்தபடி முதலில் சாய் திவ்யாவையும் பின்னர் அலெக்கியாவும் உடற்பயிற்சி செய்யும் டம்பல் மூலம் அடித்துக் கொலை செய்து பூஜைகள் செய்துள்ளனர்.
பத்மஜாவுக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும் இதுபோன்று மகள்ளை நரபலி கொடுத்தால் ஆயுள் கூடும் என்றும் கூறி இந்த படுபாதக செயலில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் தனது இருமகள்களும் எழுந்து வந்துவிடுவார்கள் என்றும் அவர்கள் கூறி வந்துள்ளனர். புருஷோத்தம் நாயுடு, பத்மஜா இருவரும் படித்து நல்ல வேலையில் பணிபுரிந்து வரக்கூடிய நிலையில் மகள்களையும் நல்ல படிப்பில் படிக்க வைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் பக்தியின் மூலம் ஏதோ நிகழ்ந்துவிடும் என்ற எண்ணத்தில் தங்களது இரு மகள்களையும் பூஜை அறையில் நிர்வாணப்படுத்தி அடித்து கொலை செய்துள்ளனர். கொலை நடந்த பிறகு காவல்துறையினர் சென்றபோது தங்கள் மகள் மீண்டும் எழுந்து வருவார்கள் ஒரு இரவு பொறுத்து இருங்கள் என்று அவர்கள் தெரிவித்து வருகின்றனர். வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் ஆதாரமாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.