நாடு முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பு 358 ஆக அதிகரிப்பு!!

நாடு முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பு 358 ஆக அதிகரிப்பு!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,650 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 374  ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,47,72,626 ஆக பதிவாகியுள்ளது.

மேலும்,நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்திருக்கிறது. இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் 6,650 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 700 குறைவு.

கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,47,72,626 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 374 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,79,133 பேர் உயிரிழந்துள்ளனர்.தொற்றில் இருந்து ஒரே நாளில் 7,051 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,42,15,977 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவர்களின் எண்ணிக்கை 77,516 ஆக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1,40,31,63,063 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 57,44,652 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மேலும்,நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளதாகவும்,அதில் 114 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version