கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கேரளாவின் கோழிக்கோட்டில் தனியார் மருத்துவமனையில் ஒரு வாரத்திற்கு முன்பு உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுவனுக்கு நிபா வைரஸுக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.