விவசாயி அமைப்பினருடன் நேற்று மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.அரசு அளித்த மதிய உணவையும் விவசாயி அமைப்பினர் ஏற்க மறுத்துவிட்டனர்.
புதுடெல்லி:
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் மசோதா சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஒரு வார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இரண்டு நாட்களுக்கு முன்பு விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை சரியான முடிவை எட்டப்படாததால் நேற்று மீண்டும் உள்துறை அமைச்சர் அமித்சா தலைமையில் மத்திய அரசின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது.
இந்தநிலையில்,விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சா்களுடன் நேற்று நடந்த 2 வது சுற்று பேச்சுவாா்த்தை சுமாா் 8 மணி நேரம் நடந்தது. இந்த பேச்சுவாா்த்தை சரியான முடிவை எதுவும் எட்டப்படாததால் நாளை மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த பேச்சவார்த்தையின் போது மத்திய அமைச்சர்களான நரேந்திர சிங் தோமா், பியூஷ் கோயல், இணையமைச்சா் சோம் பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில்,வேளாண் மசோதாக்களை ரத்து செய்து, பாராளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா். அமைச்சா்களுடனான இந்த பேச்சுவாா்த்தையின்போது விவசாய பிரதிநிதிகளுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.அப்பொழுது அந்த உணவை விவசாய அமைப்பினா் வாங்க மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.