நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. தேர்வு எழுதியவர்கள் ntaneet.nic.in என்ற அதிகாரபூர்வ இணையத்தில், தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம்.
கடந்த செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி நீட் தேர்வு நடந்த நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. தேர்வு எழுதிய மாணவர்கள் ntaneet.nic.in என்ற அதிகாரபூர்வ இணையத்தில் அறிந்துக் கொள்ளலாம்.
மத்திய தேர்வு ஆணையம் மதிப்பெண் மற்றும் ரேங்க் ஆகியவற்றை அறிவிக்கிறது. மேலும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை கவுன்சிலிங் நடத்தும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகள் மாணவர்களின் எதிர்காலத்திற்கு தேவைப்படும் என்பதால் பதிவிறக்கம் செய்துக் கொள்வது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் தேர்வு முடிவுகளை ரோல் எண் மற்றும் பதிவு எண் ஆகியவற்றை பதிவு செய்து முடிவுகளை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம்.
தேர்வு எழுதியவர்களில், பொதுப் பிரிவு மாணவர்களுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 50 சதவிகிதமாகவும், எஸ்.சி.,/எஸ்.டி.,/ஓ.பி.சி., பிரிவு மாணவர்களுக்கு 40 சதவிகிதமாகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. மருத்துவ படிப்பபை வெளிநாடுகளில் தொடர விரும்பும் மாணவர்களும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை பெற வேண்டும்.
மேலும், தேர்வு எழுதியவர்களின் மொத்த எண்ணிக்கை, மொத்த காலியிடங்கள், வினாத்தாளின் கடினம், இட ஒதுக்கீடு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு நீட் தேர்வு-2020-ன் ‘கட்-ஆப்’ மதிப்பெண்ணானது, தீர்மானிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நடப்பாண்டு முதல் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 7.5 சதவிகித இடஒதுக்கீடு கூடுதலாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வு எழுதி, முடிவுக்காக காத்திருக்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் செய்தி அலையின் சார்பில் வாழ்த்துக்கள்.