உலகம் முழுவதும் கொரோனா பரவிக் கொண்டிருக்கும் நிலையில், மும்பையில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. மும்பையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. தெற்கு மும்பையில் கொலாபா பகுதியில் 46 வருடங்களாக இல்லாத அளவிற்கு நேற்று மழை பெய்துள்ளது. இதனைத்தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களுக்கும் கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.