மத்திய பிரதேசத்தில் சுரங்கத் தொழிலாளியான ஒருவர் 3 வைரக்கற்களை கண்டு எடுத்ததன் மூலம் ஓரே இரவில் கோடிஸ்வரராக உயர்ந்துள்ளார்.
“நேரம் கூடி வந்தால் குடிசையில் உள்ளவர்கள் கூட கோபுரம் ஆழ்வார்கள்” என்ற பழமொழி ஒரு சொல்வதுண்டு ஆனால் பல பேருக்கு அந்த அதிர்ஷ்டம் வாய்ப்பதில்லை, ஒரு சில பேருக்குத்தான் அது வாய்க்கும் அப்படி ஒரு நிகழ்வு மத்திய மத்தியப்பிரதேசத்தில் நடந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில்,பன்னா மாவட்டத்தில் உள்ளது ஆழமற்ற ஒரு சுரங்கம் இங்கு சுபால் என்ற தொழிலாளி ஒருவர் சுரங்கப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிர்பாராத விதமாக ஒரு பொருள் கிடைத்துள்ளது அதை எடுத்து வந்து பார்த்த போது தான் தெரிந்தது அவை ஏழரை காரட் மதிப்பிலான 3 வைரக்கற்கள் என்று.
இதனை அடுத்து அந்த வைரக்கற்களை சுரங்க அதிகாரியிடம் சுபால் ஒப்படைத்தார். இந்த வைரக்கற்கள் ஒவ்வொன்றும் 30 முதல் 35 லட்சம் ரூபாய் மதிப்புடையவை என்றும், அவை அரசு விதிப்படி ஏலம் விடப்பட்டு பின்னர் 12சதவீதம் வரிப்பிடித்தம் போக மீதி 88சதவீத தொகை அந்த தொழிலாளியிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் அந்த ஏழை தொழிலாளி கோடீஸ்வரர் ஆகி இருக்கிறார்.