10ம் வகுப்பு படித்துவிட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை, அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா? என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட் மட்டுமே முக்கிய விளையாட்டாக கருத்தப்படுவதாகவும், மற்ற விளையாட்டுக்களுக்கும் முக்கியத்துவம் அளித்து வீரர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.
இதேபோன்று, சிறப்புத்திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்று அதிகளவில் பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வென்றாலும், மற்ற விளையாட்டு வீரர்களுக்கு இணையாக இவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில், மதுரேசன் ஏனோர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, இன்று நீதிபதி கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, 10 ஆம் வகுப்பு படித்துவிட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், 90 க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்ற மாற்று திறனாளிக்கு, பத்தாவது மட்டுமே படித்த காரணத்தால் அலுவலக உதவியாளர் பணி கொடுத்ததை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.