கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 2-வது வாரத்தில் இருந்து பிசிசிஐ சார்பாக எந்தவிதமான கிரிக்கெட் நடைபெறாமல் இருந்தாலும் கூட இதுவரை பிசிசிஐ யாருக்கும் சம்பளம் பிடித்தம் செய்யும் செயலில் ஈடுபடவில்லை.
கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் தொற்றுகளால் பாதிக்கப்பட்டார்கள் அதுமட்டுமின்றி பொருளாதாரம் அதல பாதாளத்திற்குள் விழுந்தது. நிறுவனங்களுக்கு மட்டும் அல்லாமல் இது உலகின் அனைத்து கிரிக்கெட் போர்டுகளுக்கும் நிதி பற்றாக்குறை ஏற்படும் வண்ணம் தொற்று அனைவரையும் புரட்டிப்போட்டது .
இதில் ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தங்களிடம் வேலை பார்க்கும் அதிகாரிகளை வலுக்கட்டாயமாக வேலையிலிருந்து வெளியேற்றியது, அவர்களுக்கு சூப்பர் மார்க்கெட் போன்ற கடைகளில் வேலையும் வாங்கி கொடுத்தது மற்றும் பணியில் இருக்கும் ஒரு சிலருக்கும் சம்பளத்தை குறைத்து வழங்கியது.உலகில் இருக்கும் மற்ற கிரிக்கெட் வாரியங்களும் இதுபோன்று ஆஸ்திரேலியாவை பின்பற்றி சம்பள குறைப்பை செயல்படுத்தினர்.ஆனால் உலகிலேயே பணக்கார கிரிக்கெட் வாரியம் ஆன பிசிசிஐ இதுவரை ஆள் குறைப்பு அல்லது சம்பள குறைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எப்பொழுதும் போல வீரர்களுக்கான சம்பளத்தை சரியான நேரத்தில் வழங்கி வருகிறது.
சுமார் ஐந்து மாதம் இதுவரை சம்பளம் கொடுத்து ஆகிவிட்டது இப்பொழுது வரை பிசிசிஐ எந்த சிக்கலையும் சந்திக்கவில்லை ஆனால் இந்த நிலை இப்படியே தொடருமேயானால் பிசிசிஐ யும் ஆட்குறைப்பு சம்பளம் பிடித்தம் போன்ற நடவடிக்கைகளை இனிமேல் கையில் எடுக்கும் வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு பிசிசிஐ அதிகாரி கூறுகையில் ‘‘சம்பளம் பிடித்தம் குறித்து நாங்கள் இதுவரை எந்த விவாதமும் மேற்கொள்ளவில்லை. ஆனால், தற்போது நிலவும் சூழ்நிலையில் இதுகுறித்த ஒரு விவாதம் கண்டிப்பாக எழும் என்றே நான் நினைக்கின்றேன் ஆனாலும் இதுபோன்ற சம்பளப் பிடித்தம் வேலைநீக்கம் போன்றவற்றை செய்யும் பொழுது ஏற்படும் பாதிப்பையும் முழுவதுமாக உணர்ந்துதான் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுப்போம் என்றார் எனினும் இதுபோன்ற நிலை தொடரும் பட்சத்தில் வேலைநீக்கம் சம்பளம் பிடித்தம் ஆகியவற்றிற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும் தெரிவித்தார்.