முன்னெடுக்கப்படும் வலிமையான சீர்திருத்தங்களால் இந்திய பொருளாதாரம் 2021-ல் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: இந்தியாவின் பொருளாதாரம் 3வது காலாண்டில் வலுவாக மீண்டு வரும் என்று ஆர்பிஐ கணித்துள்ளது. பங்குச்சந்தைகள், ஜிஎஸ்டி வருவாய், வங்கி கடன் வளர்ச்சி, அந்நிய நேரடிய முதலீடு போன்றவை தொடர்ந்து அதிகரித்துள்ளது.
ஒரு நாடு – ஒரு ரேஷன் திட்டத்தால், 68.8 கோடி மக்கள் பயன் பெற்றுள்ளனர். இடம்பெயர் தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்றார்.
கொரோனாவால் வீழ்ந்த பொருளாதாரத்தை மிகும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அக்.1 முதல் பணியில் சேர்ந்த புதிய தொழிலாளர்களுக்கு 24% பி.எஃப். தொகையை மத்திய அரசே செலுத்தும். மார்ச் 1 முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை காலகட்டத்தில் பணியை இழந்தவர்களுக்கு இந்த சலுகை பொருந்தும்.
ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை அன்னிய நேரடி முதலீடு 13% அதிகரித்துள்ளது. 3வது காலாண்டில் இந்திய பொருளாதாரம் நேர்மறையான வளர்ச்சிக்கு திரும்பும். அக்டோபர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் தொகை சுமார் ஒரு லட்சம் கோடியை கடந்து உள்ளது.
சிறு, குறு தொழில்களுக்கான அவசர கால கடன் வசதி மார்ச் வரை நீட்டிக்கப்படுகிறது. 11 மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனாக 3,621 கோடி வழங்கப்பட்டுள்ளது. வருமான வரி ரீபண்டாக 1.32 லட்சம் கோடி ரூபாய் 39.7 லட்சம் பேருக்கு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. மாநில மின் நிறுவனங்களுக்கு ரூ.1.18 லட்சம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரோஜார் புரோட்ஷகான் யோஜனா திட்டம் 31.03.2019 வரை அமல்படுத்தப்பட்டது. இது அனைத்து துறைகளிலும் அமல்படுத்தப்பட்டது.
3 ஆண்டுகள் வரை அமலில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த திட்டத்தில் சேருபவர்களுக்கு மத்திய அரசின் சலுகைகள் கிடைக்கும். இதில் சேர்ந்த 1,52,899 நிறுவனங்களில் பணிபுரியும் 1,21,69,960 பேருக்கு ரூ.8300 கோடி அளவு சலுகைகளை பயன்பெற்றுள்ளனர்.
கொரோனாவில் இருந்து மீளும் கட்டத்தில் புதிய வேலைவாய்ப்பை உருவாக்க ”ஆத்மநிர்பார் பாரத் ரோஜ்கர் யோஜனா” திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.