சீனாவின் வுஹான் நகரில் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் பரவிய கொரோனா நோய் இன்று உலகம் முழுவதும் அதிதீவிரமாக பரவி வருகிறது.
உலக அளவில் அமெரிக்காவில்தான் கொரோனா நோயின் பரவல் அதிகமாக உள்ளது அடுத்த இரண்டு இடத்தில் பிரேசில் மற்றும் இந்தியா உள்ளது. தற்போது இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 25 லட்சத்தைக் கடந்ததுள்ளது , அதேசமயம், கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 18 லட்சமாக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிதுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் மட்டும் புதிதாக 65 ஆயிரத்து 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 25 லட்சத்து 26 ஆயிரத்து 196 ஆக அதிகரித்துள்ளது.இதில் ஆறுதல் தரும் விதமாக கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை18 லட்சத்து 8 ஆயிரத்து 936 பேராக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 71.61 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா நோயினால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 லட்சத்து 68 ஆயிரத்து 220 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த எண்ணிக்கையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை என்பது, 26.45 சதவீதம் மட்டுமே. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 996 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 49ஆயிரத்து 36 ஆக அதிகரித்துள்ளது. கரோனா உயிரிழப்பு 1.94 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, நேற்று மட்டும் 8,68,679 கொரோனா மாதிரிகளை பரிசோதனை செய்துள்ளது. இதுவரை ஒட்டுமொத்த கொரோனா பரிசோதனை மாதிரி 2.85 கோடிக்கும் மேல் அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.