சபரிமலை ஐயப்பன் கோவிலில் 50 வயதுக்கு குறைவான,65 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அனுமதி இல்லை என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர பூஜைகளை தொடர்ந்து நேற்று முதல் ஐயப்ப ஸ்வாமியை தரிசிக்க பக்தர்களுக்கு நாள்தோறும் கேரள அரசு வார நாட்களில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 3 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மண்டல பூஜை நடைபெறும் டிசம்பர் 26 ம் தேதி மற்றும் மகர விளக்கு பூஜை. நடைபெறும் 2021 ஜனவரி 14 ஆகிய 2 நாட்கள் 6 ஆயிரம் பக்தர்கள் வீதம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்என்றும் உத்தரவு பிறப்பித்தது.
இந்தநிலையில்,கொரோனா பரவல் தொற்று காரணமாக பெண்களுக்கான வயதுவரம்பு 50 வயதுக்கு குறைவான,65 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அனுமதி இல்லை என்று கேரள அரசு அறிவித்துள்ளது.