44 கிரிமினல் வழக்குகள்கொண்ட பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு.
44 கிரிமினல் வழக்குகள்கொண்ட பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு.
கடந்த செப்., 14 ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் ஹத்ராசில் பட்டியல் இனத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்தச் சம்பவத்தைக்கண்டித்து நாடு முழுவதும் பந்த் நடத்தியது.
இளம்பெண்ணைப் பலாத்காரம் செய்து கொன்ற குற்றத்திற்காஅக்ஜ சந்தீப் சிங், ராமு சிங், மற்றும் லவ்குஷ் சிங் என்ற 4 பேரைக் கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில்,இந்தச் சம்பவம் குறித்து பாஜக தலைவர்கள் சிலர் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் உ.பி., பல்யா தொகுதி பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங் , பெண் குழந்தைகளுக்கு கலாச்சாரத்தையும், சடங்குகளையும், நல்ல பண்புகளையும் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். இதன் மூலமே வன்கொடுமையை தவிர்க்கர் முடியும்.அரசாங்கம் தனது கைய்ல் வாளைஏந்தினலும்கூட இதுபோன்ற வன்கொடுமைகளைத் தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு பாஜக தலைவர் ரஞ்சித் பகதூர், வன்கொடுமைக்கு உள்ளான இளம் பெண் வழக்கில்குற்றம் சாட்டப்பட்ட ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார் என்று கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரஞ்சித் பகதூர் மீது 44 கிரிமினல் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.