டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார்.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் முகாம் மேற்கொண்டுள்ள அவர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேர் விடுதலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆளுநர் அவர்களுடன் விவாதித்ததாகத் தெரிகிறது.இந்நிலையில் டெல்லி சுற்றுப்பயணத்தின் மூன்றாம் நாளான இன்று ஜனாதிபதி மாளிகை சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழகம் சார்ந்த முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக பேசினார். இந்த சந்திப்பு அரை மணி நேரம் நீடித்தது.