விவசாயிகளின் பொறுமையை சோதித்து பார்க்க வேண்டாம் என்று முன்னாள் வேளாண் அமைச்சர் சரத்பவார் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மும்பை:
மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் பஞ்சாப் மற்றும் ஹரியானா பகுதியை சேர்ந்த விவசாயிகள் 15 க்கு நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஏற்கனவே மத்திய அரசு விவசாய அமைப்பினருடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்திய பொழுதும்,அதற்கான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை.இந்த நிலையில் விவசாயிகள் இந்த போராட்டத்தை இன்னும் தீவிர படுத்த வரும் 14 ம் தேதி முதல் நாடு முழுவதும் போராட்டத்தை கொண்டு செல்ல முயற்சிகள் செய்து வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து,முன்னாள் வேளாண்துறை அமைச்சரும்,தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத்பவார் வேளாண் போராட்டம் குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.அதில் மத்திய அரசு எதிர்கட்சிகளிடம் வேளாண் மசோதாக்களை பற்றி விவாதம் செய்த பிறகே,நாடாளுமன்றத்தில் அதை நிறைவேற்றி இருக்க வேண்டும்.அவசர அவசரமாக அதை நிறைவேற்றிய அவசியம் என்ன ?
சுமார் 700 டிராக்டர்களில் விவசாயிகள் பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி எல்லை பகுதிக்கு (நேற்று) காலை விவசாயிகள் வந்து சேர்ந்துள்ளனர்.விவசாயிகள் பிரச்சினைகளை முடிவு கொண்டு வர,விரைவான தீர்வை கொண்டுவர வவேண்டும்.அதன்படி இல்லாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் பரவுவதை தடுக்க முடியாது என்றார்.மேலும் இந்த நாட்டுக்கு உணவு வழங்குபவர்கள் விவசாயிகள். அவர்களின் பொறுமையை பரிசோதித்து பார்க்காதீர்கள் என்று மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று இவ்வாறு அவர் கூறியுள்ளார்.