அஜித்துக்கு பிறகு தோனிதானாம்…

முன்னாள் இந்திய கேப்டன் அஜித் வடேகரின் மனைவி ரேகா வடேகர், தனக்குப் பிடித்த கேப்டன் எம்.எஸ்.தோனிதான் என்று கூறியுள்ளார்.

தோனி என்றாலே எப்போதும் ஒரு ஆரவாரம், ஆனந்தம், அலப்பரை தான். இந்திய கேப்டன்களிலே இவர் சிறந்தவராக கருதப்படுபவர். இவரையும் இவரின் கேப்டன்சியையும் கண்டு வியக்காதிருக்க முடியாது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் அஜித் வடேகர் அவரின் மனைவி தன் கணவரும் தோனியை போன்றே அமைதியான வர்த்தக என்று கூறுகிறார்.

1971-ல் இங்கிலாந்தில் முதன் முதலாக டெஸ்ட் தொடரை வென்ற கேப்டன் அஜித் வடேகர் ஆவார். வடேகரும் அமைதியான கேப்டன், கூல் கேப்டன் என்று தோனி போலவே அப்போது மதிக்கப்பட்டவர்.

இந்திய கிரிக்கெட் அணியின் பொற்காலம் 1971. ஏனெனில் இங்கிலாந்தில் வென்று வலுவான மே.இ.தீவுகளிலும் தொடரை வென்று வந்தார் அஜித் வடேகர். இந்நிலையில் இந்த பொன்னான நினைவுகளை அனைத்து வீரர்களும் பகிர்ந்து வருகின்றனர்.

தற்போது மிட் டே இணையத்தில் பேட்டி ஒன்று அளித்த அஜித்தின் மனைவி விராட் கோலியைக் காட்டிலும் எனக்கு தோனியின் கேப்டன்சிதான் பிடிக்கும். கிட்டத்தட்ட அஜித் (வடேகர்) போல்தான் தோனியும் என்று கூறினார்.

அஜித்தும் தேவையற்ற இடங்களில் தேவையற்ற நேரங்களில் கோபம் கொள்ளாமல் அமைதியாக இருப்பார். அவர் தேவையற்ற விடயங்களில் தன் கவனத்தை செலுத்த மாட்டார்.

விராட் கோலியின் அதி ஆக்ரோஷம் அவர் பேட்டிங்கைக் காலி செய்து வருகிறது. கோலி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவையற்ற ஆக்ரோஷத்தை அவர் குறைத்தால் நிச்சயம் சீராக அவரால் பேட்டிங்கில் ஆட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version