இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 68,770 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தற்போது இந்தியா முதலிடத்தில் உள்ளது.
கொரோனா என்னும் கொடிய வைரஸை அழிக்க உலக நாடுகள் அனைத்தும் கடந்த 7 மாதங்களாக போராடிக் கொண்டு தான் வருகின்றனர். அனைத்து நாடுகளும் கொரோனாவிற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. ரஷ்ய நாடு தடுப்பு மருந்தை கண்டுபிடித்தாலும் அதை பற்றிய விஞ்ஞானிகளின் கேள்விகளுக்கு எந்த விதமான பதிலும் அளிக்கப்படவில்லை.
உலகளவில் இதுவரை 2.56 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8.54 லட்சம் பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். 1.79 கோடி பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்த கொரோனவைரஸ் முதலில் கண்டறியப்பட்ட நாடு சீன நாடாகும். இன்றைய நிலையில் அந்நாடு இதிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. உலகளவில் 213 நாடுகள் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது முதல் மூன்று இடத்தில இருப்பது அமெரிக்கா, பிரேசில், மற்றும் இந்தியா ஆகும்.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,816 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பிரேசிலில் 48,590 பேருக்கு தொற்றானது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் 68,770 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டு, இந்தியா தற்போது முதல் இடத்தை பிடித்து விட்டது.
இந்தியாவில் தற்போது பல தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இது போன்ற ஒரு செய்தி சற்று கலக்கம் அளிப்பதாகவே உள்ளது.