கனமழையின் காரணமாக மூணாறு அருகே நிலச்சரிவு ஏற்பட்டதால் தேயிலை தோட்டத்தில் பணியாற்றிய 85 தமிழர்கள் மண்ணில் புதைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணிகளை அதிகாரிகள் துரிதப்படுத்தி வருகின்றனர்.
கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக பல மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் மூணாறில் இருந்து 18 கிமீ தொலைவில் உள்ள ராஜமலை பெட்டிமுடி பகுதியில் உள்ள தேயிலை தோட்டப்பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இப்பகுதிக்கு அருகே தோட்ட தொழிலாளர்கள் வசிக்கும் தொகுப்பு வீடுகள் இருந்தால் நிலச்சரிவில் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பணி முடிந்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது நடந்த இச்சம்பவத்தால் 85 தமிழர்கள் மண்ணில் புதைந்துவிட்டனர்.
கேரளத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஆங்காங்கே சாலைகளில் மண் சரிந்து கிடப்பதால் குறிப்பிட்ட நேரத்தில் தீயணைப்பு துறை அதிகாரிகள் வரமுடியாமல் தவித்துவந்த நிலையில் பல போராட்டங்களுக்கு பிறகு சம்பவ இடத்திற்கு வந்தனர். இதனையடுத்து மண்ணில் புதைந்திருத்தவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில் 17 பேரின் உடலை மீட்டுள்ளனர். மீதமுள்ளவரை தேடும் பணியில் அதிகாரிகளை துரிதப்படுத்தியுள்ளனர். இரவு நேரத்தில் தொய்வு ஏற்பட்டதையடுத்து தொடர்ந்து அப்பகுதியில் தீயணைப்புத்துறை அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.