காதலிக்க மறுத்ததால் 2 சிறுமிகள் கொலை

உத்தரபிரதேசம் மாநிலத்தில் வயலில் சிறுமிகள் இறந்து கிடந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காதலிக்க மறுத்ததால் கொலை செய்தது அம்பலம்.

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் பாபுஹரா கிராமத்தைச் சேர்ந்த பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுமிகள் 3 பேர் கடந்த புதன்கிழமையன்று வயல்வெளியில் வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கி கிடந்தனர். ஒருதலைக்காதலால் அவர்களுக்கு தண்ணீரில் பூச்சிமருந்து கொடுத்து கொன்றது தெரிய வந்துள்ளது.  “இதுதொடர்பாக முக்கிய குற்றவாளி வினய் மற்றும் மற்றும் அவருக்கு உதவிய ஒரு சிறுவன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கு காலத்தில் சிறுமிகள் வயல்வெளிக்கு வரும்போது வினய் என்பவர் அவர்களுடன் பழகி வந்துள்ளார். அதில் ஒரு பெண்ணை வினய் ஒருதலைபட்சமாக காதலை வளர்த்துள்ளார்.

ஆனால் அந்த பெண் அவரை காதலிக்க மறுத்ததுடன்  அந்த பெண்ணின் தொலைபேசி எண்ணை கேட்டபோது தர மறுத்துள்ளார். எனவே வினய் அந்த சிறுமியை கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார். வழக்கம்போல் 3 சிறுமிகளும் வயல்வெளிக்கு வந்தபோது வினய் காதலித்த சிறுமிக்கு தாகம் எடுக்கவே தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது வினய், நீரில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து அந்த சிறுமிக்கு கொடுத்துள்ளார். அந்த சிறுமி குடித்துக்கொண்டிருக்கும்போதே மற்ற 2 சிறுமிகளும் தண்ணீரை பிடுங்கி குடித்துள்ளனர். மற்ற இரண்டு சிறுமிகளையும் தண்ணீர் குடிப்பதைத் தடுக்க முயன்றதாகவும் ஆனால் பலனளிக்கவில்லை எனவும் வினய் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். சிறுமிகள் மயக்கம் அடைந்தபோது, அவர் பீதியடைந்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. வினய்யின் வாக்குமூலம் சரிபார்க்கப்பட்டு வருகிறது” என்றார்.

Exit mobile version